Monday, January 10, 2011

பேக் சாட் விஜயகாந்திற்கு சில கேள்வி


எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் என்று எப்பொழுதும் பீற்றிக்கொள்ளும் விஜயகாந்தே எதற்காக, எந்த காரணத்திற்காக எமது தலைவர் கலைஞர் கருணாநிதி கையினால் தாலி கயிறினை வாங்கி உங்கள் அருமை மனைவிக்கு கட்டினீர்?

பொங்கல் பையைப் பார்த்துதான் உதயசூரியன் தி.மு.க வின் சின்னம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை 
உதயசூரியன் படம் ஏன் இடம்பெறுகிறது எனக் கேட்கும் இந்த அறிவாளி…

அம்மையார் ஜெயலலிதாவின் பெயரில் போக்குவரத்துக் கழகமும், திரைப்பட நகரமும் இருந்தபோது இவர் எங்கே போயிருந்தார்?
உத்தமரான உங்களுக்கு அன்றைக்கு எங்கள் கலைஞர் பற்றி தெரிய வில்லையா.?

என்னமோ வானத்தில் இருந்து குதித்த கடவுள் மாதிரி பேசிக்கொண்டே போகிறீர்.

மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீரோ ?.

நீங்கள் பேசிய பேச்சுக்கு ஒரு நாள் கண்டிப்பாக ஒரு பலனை அனுபவிக்க வேண்டிய காலம் வரும்.

அப்பொழுது நீங்கள் உணர்வீர்கள். ஆனால் காலம் கடந்த உணர்வாக இருக்கும்.

No comments:

Post a Comment