Wednesday, February 20, 2013

அரசியல் ரொம்ப ஈசி இல்ல


எங்கள் அண்ணன் குன்னம் தொகுதி திரு சிவ சங்கர் MLA அவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள ஆதங்கத்தை இங்கு பதிவு செய்ததுள்ளோம்...

""  இது எல்லோருக்குமான நிலைத் தகவல் அல்ல...

என் மீது எரிச்சல் கொண்ட தோழர்களுக்கானது. எனது நிலைதகவல் கருத்துகளால் வெறுப்பு கொண்டு, தொடுக்கும் பாணம் “ இவர் எம்.எல்.ஏ வேலை பார்க்கிறாரா, இல்லையா “.

எம்.எல்.ஏ பணியோடு சேர்த்து எனக்கு மாவட்ட செயலாளர் பணியும் இருக்கு.

களத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் பணியை தெரியப்படுத்துவதற்காக எனது ஒரு நாள் சுற்றுப்பயண விவரத்தை மட்டும் இணைத்துள்ளேன்.

சுய விளம்பரம் அல்ல. பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளின் பணி இப்படிதான் அமையும்.

16.02.2013 சனிக்கிழமை...
காலை 8.30 – இல்லத்தில் பார்வையாளர்கள் சந்திப்பு.

9.00 மணி அரியலூர் நகரம்
• சபரி டிஜிட்டல் சபரிஸ்வரன் திருமணம் விசாரிப்பு
• தொ.மு.ச தோழர் கருப்பையா புதுமனைப் புகுவிழா
• மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எழில்மாறன் திருமணம் விசாரிப்பு (காலை உணவு )


10.30 அரியலூர் ஒன்றியம், அய்க்கால் கிராமம்
* கழகத் தோழர் அழகுதுரை இல்ல காதணி விழா விசாரிப்பு

11.30 செந்துறை ஒன்றியம்
* தெற்கு பரணம் கிளை பிரதிநிதி விஸ்வநாதன் தந்தை மறைவு விசாரிப்பு
* பரணம் ஆதிதிராவிடர்காலனி செயலாளர் கோவிந்தன் மறைவு விசாரிப்பு
* வடக்கு பரணம் கழகத் தோழர் விஸ்வநாதன் தந்தை மறைவு விசாரிப்பு

பகல் 12.30 ஆண்டிமடம் ஒன்றியம், குவாகம் கிராமம்
* குவாகம் கிளை பிரதிநிதி அன்பழகன் திருமணம் விசாரிப்பு
* கீழகுவாகம் கழக முன்னோடி ரத்தினசாமி மறைவு விசாரிப்பு

1.15 கு.வல்லம் கிராமம்
* வல்லம் கிளை கழக செயலாளர் முருகேசன் புதுமனைப் புகுவிழா விசாரிப்பு
* வல்லம் கழகத் தோழர் கண்ணன் புதுமனைப் புகுவிழா ( மதிய உணவு )
* வல்லம் கிளை பிரதிநிதி பொய்யாமொழி மகன் திருமணம் விசாரிப்பு

3.00 மணி இடையக்குறிச்சி கிராமம்
• முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ( அதிமுக ) அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மறைவு விசாரிப்பு
• கழக தோழர் செல்வராசு தந்தை மறைவு விசாரிப்பு


மாலை 4.30 ஜெயங்கொண்டம் நகரம்
• மறைந்த கொள்கை முரசு “ அலைகடல் வெற்றிகொண்டான் “ இல்லம்- இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

5.30 தா.பழூர் ஒன்றியம்
* ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம் ( 6.00- 8.00)

8.30 ஜெயங்கொண்டம் நகரம்
* மறைந்த மருத்துவர் விஜயன் உடலுக்கு இறுதி அஞ்சலி

9.15 உடையார்பாளையம் பேரூர்
* மறைந்த கழகப் பேச்சாளர் சி.ஆர்.மாரிமுத்து உடலுக்கு இறுதி அஞ்சலி

10.00 ஜெயங்கொண்டம் ஒன்றியம்
* வளவெட்டி குப்பம் கழக முன்னோடி முருகேசன் மறைவு அஞ்சலி

இரவு 10.45 அரியலூர் வீடு – இரவு உணவு.
( கிட்டத்தட்ட 160 கி.மீ சுற்றுப்பயணம், 14,15,16,17 அனைத்து நாட்களுமே இப்படிதான் )

இது என்ன கல்யாணத்திற்கு, சாவிற்கு போனதெல்லாம் கணக்கான்னு ஆரம்பிச்சுடாதீங்க... எங்கு போனாலும் பொதுமக்கள் சந்திப்பு தான், பொதுப் பணியின் அங்கம் தான். நோக்கம் அதுதான்.

தேவைப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் பணியையும் ஒரு நாள் பதிவிடுகிறேன். ( தினமும் போட்டால் உங்களுக்கே அலுப்பாயிடும்.)

# இயக்கப்பணியும், பொதுப்பணியும் முடித்துதான், இணையப்பணி. அதுவே உங்களுக்கு பிடிக்கலைன்னா, நான் என்ன சார் செய்ய ?   '''



தோழர்களே ....
அவருடைய இந்த ஒரு நாள் பட்டியல் படிப்பதற்கே நமக்கு மூச்சு வாங்கும் பொழுது, சற்று யோசித்து பாருங்கள் சமூக பணி எவ்வள்ளவு சிரமம் என்று, ஆனால் அந்த பணியை ஆர்வமுடன் செய்யும் பொழுது அதில் ஒருவித மன அமைதியும் திருத்தியும் கிடைக்கும், ....

இது வரை அரசியல் மீது இருந்த ஒரு தவறான பார்வையை நீக்க இந்த ஒரு பதிவே போதும் நினைக்கிறன் , ஆம் இது ஒரு வரலாற்று பதிவு, என்னதான் பணம்,செலவாக்கு, மரியாதை, இருந்தாலும் ஒரு சராசரி மனிதனுக்கு கிடைக்கும் சுதந்திரமும், ஓய்வு நேரமும், பொழுதுபோக்கோ நம்மை போன்ற சமுகவதிகளுக்கு கிடைப்பதில்லை என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது...ஒரு சராசரி சாமானியன் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்றால் அது ஒரு பெரிய விஷயமல்ல,ஆனால் நாம் கண்டிப்பாக செல்லவேண்டும் காரணம் நாம் அவர்களின் ஊழியன் ...அவர்களால் இந்த இடத்திற்கு வந்தவர்கள் எனவே ஒரு சமூகாவதிக்கு கிடைக்கும் செல்வாக்கை மடுமே பார்க்கும் இந்த உலகம் அவர்களுக்கு இருக்கும் கடமைகளையும், எதிமங்கலையும் பார்பதில்லை ....கொஞ்சம் இரண்டு பக்கத்தையும் பாருங்க ....pls..

No comments:

Post a Comment