Wednesday, November 16, 2016

தற்கால பரசக்தி

இந்த சமூகம் விசித்திரம் நிறைந்த பல திட்டங்களை சந்தித்திருகின்றது.
புதுமையான பல அரசியலை கண்டிருகின்றது.
ஆனால் இந்த திட்டம் விசித்திரமும் அல்ல போராடும் நானும் புதுமையான மனிதன் அல்ல.
வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்.முகநூலில் குழப்பம் விழைவித்தேன்.
மோடியையும், லேடியையும் தாக்கினேன்.
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்க போகிறேன் என்று.
இல்லை. நிச்சயமாக இல்லை. முகநூலில் குழப்பம் விழைவித்தேன், முகநூல் கூடாதென்பதற்காக அல்ல.
முகநூல் காவிகளின் கூடாரமாகிவிட கூடாதென்பதற்காக.
ஆளும் காட்சியை தாக்கினேன்.
அவன் அம்மையாரி பக்தன் என்பதற்காக அல்ல.
ஆட்சியே காட்சி ஆகி விட்டதை கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை.
உலகத்தில் யாருக்கு இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்க பட்டேன்.
நேரடியாக பாதிக்க பட்டேன்.
சுயநலம் என்பீர்கள்.
என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்த்திருகின்றது.
ஆகரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல.
என்னை குற்றவாளி என்கிறார்களே.
இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்.
மனிதநேய மிக்க மனிதர்கள் இல்லை என் பாதையில். மதத்தால் மதம் பிடித்த மதவாதிகள்.
சாதியை தீண்டியதில்லை நான்.  தீயை தாண்டியிருக்கிறேன்.
கேளுங்கள் என் கதையை.
கமண்ட் எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இந்த ஊட்டியிலே பிறந்தவன் நான்.
பிறக்க ஒரு ஊர்.
பிழைக்க ஒரு ஊர் .
தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா?
ஊட்டி என் உயிரை வளர்த்தது.
அவிநாசி என்னை உயந்தவன் ஆக்கியது.
வங்கி வாசலியே தவம் கிடக்கும் என் மக்களை காண வந்தேன்.  அதிரடி திட்டம் என்று சொல்லி உங்களையெல்லாம் வங்கி வாசலில் நிற்க வைத்தாரே மோசக்காரர் மோடி..
இவர் அறிவிப்பிலே விழுந்தவர்களில் நானும் ஒருவன்.
பணப்பெட்டியை பறி கொடுத்தேன்.
பசியால் திரிந்தேன்.
மெலிந்தேன்.
கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த என் மக்களை கண்டேன் கண்ணற்ற ஓவியமாக.
ஆம்.
வங்கி வாசலில் அடிமைகளாக.
நாட்டி பெயரோ தமிழ்நாடு.
மங்களமான பெயர்.
ஆனால் தண்ணீரும் இல்லை, பணமும் இல்லை...
செழித்து வாழ்ந்த நாடு சீரழிந்து விட்டது.
வேலையில்லா பிள்ளைகள்.
கண்ணிலே நீர்.
விவசாயி  அலைந்தான்..
அவர்களுக்காக நான் அலைந்தேன்.
மக்களுக்கு கருணை காட்டினார்கள் பலர்.
அவர்களிலே சிலர் கைமாறாக  அப்பொலோவில் இருந்து வாக்கு கேட்டனர்.
அதிரடி  திட்டத்தை அறிவித்துவிட்டு அழுக்கமாக நிற்கிறாரே இதோ இந்த கொடியவர் மோடி.
விளம்பரத்தால் மயக்க முயன்றார் என் தாய் நாட்டை.
நான் தடுத்திறாவிட்டால் என் தாய்நாடு அப்போதே விலை போயிருக்கும்.
சில ப்ரோக்கர்களும் காப்பாற்ற வந்தார்கள்.
ப்ரதி உபகாரமாக கரன்சியுடன் கண்டேனர்  கேட்டனர்.
அவர்களில் தலைமையானவன் இதோ இந்த நாதாரி.
கிங்கா, கிங் மேக்கரா என கேட்டிருக்கிறான்.
தமிழர்களின் பெயரால்.
தமிழ் மக்களின் பெயரால்.
தமிழர்கள் புழுவாக துடித்தப்படியாவது உயிரோடு இருந்திருப்பாள்.
அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது இதோ இந்த மோடிதான்
தான் விவசாயம் செய்த பயிர் வாடுவதை விரும்பவில்லை.
பாடுபட்டு தான் சம்பாதித்த தன் பணத்தை வங்கியில் மாற்ற கூட முடியவில்லை.
அன்றாட செலவிற்க்கு வழியின்றி ப்ரோக்களை அனுகினான்
வங்கி வரிசை வெகுதூரம் இருந்தால் வியாபாரியை அனுகுவது விந்தையல்ல.
ஆயிரம் ரூபாய் காந்தி.
ஐநூறு ரூபாய் காந்தி.
செல்லாது என்றனர் ,
அவர்களே வறுமையில் துடித்துக்கொண்டிருந்த போது இந்த அறிவிப்பை அறிவித்திருக்கிறார்.
அந்த கஷ்ட்டத்தை காண சகிக்காமல்.
கையில் மையிட எதிர்ப்பு தெரிவித்தார்கள் நம் மக்கள்.
இது எப்படி குற்றமாகும்.
தான் சம்பாதித்ததை தாரை வார்த்து விட்டு  தமிழனுக்கு வாழ்வதற்க்கு வழி இல்லை. நாட்டிலே நியாமாக  வாழ்பவர்களுக்கு பாதுகாப்பில்லை.
என் மக்கள் மட்டும் கொஞ்சம் யோசித்து இருந்தால்..
மோடிக்கு மகுடமே கிடைத்திருக்காது
வளர்ச்சி என்ற வலையில், கார்ப்ரேட் உதவியில் குறுக்கு வழியில் மக்களை மடையர்களாக்கியது இந்த அரசு ..
இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது.
மதவாதம் என் மக்களை விரட்டியது.
பயந்து ஓடினர்...
(நீட்) நுழைவுத் தேர்வு என் மாணவர்களை துரத்தியது.
மீண்டு ஓடினர்...
வறுமை என் விவசாயிகளை பயமுறுத்தியது.
ஓடினர்
ஓடினர்
வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்.
வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர்.
செய்தார்களா.
வாழ விட்டார்களா என் மக்களை

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

இல்லை யார் வழக்கிற்க்கும் இல்லை.
அதுவும் என் வழக்குதான்.
என் மக்களின் வழக்கு.
மை வைத்து என் மக்களின் மானத்தை அழிக்க எண்ணிய  புத்தி புகட்ட மோடியின் வழக்கு.... இதில் என்ன தவறு.
உழைத்து முன்னேற முயன்றது ஒரு குற்றம்.
சமஸ்கிரத்தை எதிர்தது ஒரு குற்றம்.
நான் சிவில் சட்டத்தை எதிர்தது ஒரு குற்றம்.
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?
யார்?
யார் காரணம்?
மக்களை கஞ்சிக்கு வழி இல்லாதவளாக அலையவிட்டது யார் குற்றம்.
விதியின் குற்றமா? அல்லது விதியை சொல்லி வயிர் வளர்க்கும் வீணர்கள் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?
பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்க்கு வரவழைத்த வஞ்சகர்களின் குற்றமா?
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?
கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை கருப்பு பணமும், , லஞ்ச ஊழலும் குறைய போவதில்லை.
இதுதான் எங்கள் வாழ்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.....

Babu shanthi

No comments:

Post a Comment