Sunday, December 31, 2017

அரசியலை புரிந்துகொள்ள முயலுங்கள்...

ஐயா சிங்கராயர் ஆரோக்கியசாமி

திமுகவைப் பொருத்தவரை  இந்தியாவில் உள்ள மற்ற  மற்ற  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மனதில்  நன்மதிப்புகொண்ட  ஒரு உயர்வான  எண்ணம் கொண்டிருப்பதற்குப் பல  நற்காரணங்கள்  உள்ளன. ஒரு குடும்பத்தில்,ஒரு கிராமத்தில் அதனதன் தலைவர்கள் எப்படி மரியாதைக்குறியவர்களோ,
அதேபோல, இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளில் மற்ற கட்சிகளுக்கு முன்மாதிரியாகவும்,
தலைமைப் பண்பும்,
கொண்ட கொள்கையின் மூலம் அறிவுறை சொல்லும் அளவிற்கான தன்மைகளைக் கொண்டிருப்பதற்கு, எக்கட்சியிலும் காணப்படாத
திமுகவின் கொள்கைகளே காரணம். பல பத்தாண்டுகளுக்கு முன்பே திராவிடம்  விதைத்த விதைதான் இன்று மற்ற மற்ற மாநிலங்களில் முளைக்க ஆரம்பித்திருக்கிறது.துவக்கத்தில் நம்மை மொழி வெறியர்களாகப் பார்த்தவர்களே தற்போது  நமது பெருமையை , நாம் போராட்ட குணத்தை இப்பொழுதுதான்  பெருமையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

      இப்படி,
இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் பல்கலைக்கழகமான திமுகவின் கொள்கைகளை, பிறர் புரிந்துகொண்ட அளவிற்கு இன்றைய பொதுவான இளைஞர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்றால் இல்லை என்கிற கசப்பான உண்மை மட்டுமே விடையாக வருகிறது.
    தேர்தலில் திமுக வெற்றிபெறுவதற்கு திமுக உறுப்பினர்களின் வாக்குகள்  மட்டுமே பயணைத் தராது. எக்கட்சியையும் சாராத பொதுமக்களின் வாக்குகளும் கிடைக்கப்பெறும்போதுதான் அது மக்களுக்கான வெற்றியாக மாறி தமிழினமும்,தமிழ் மொழியும் பாதுகாக்கப்படும், பாதுகாக்கப்படுகிறது.
     இப்படி ,
இனமும் மொழியும் காக்கப் பாடுபடும் இயக்கத்திற்குத்தான் ஆபத்துக்களும் சேர்ந்தே வரும்.
(1)கற்பனைகூட பன்னமுடியாத 1,75,000 கோடி என ஒரு இயக்கத்தையே அழிப்பதற்காக,
(2)அதிலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் இந்தியாவின் உயர் பதவியில் இருக்கிறார் என்கிற இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே சதி வலைகள் மிக மிகக் கவனமாகத் திட்டமிட்டு பின்னப்பட்டு அதை கயவர்களால் நடத்தியும் காட்டப்பட்டது.
இதனால் பெரும் பின்னடைவு திமு கழகத்திற்கும் ,இந்தியா என்கிற பல இனங்கள் ஒன்றுகூடி வாழும் இந்திய நாட்டிற்குமே ஆகும்.
       பத்திரிகையாளர் திரு.ராதாகிருஷ்ணன் கூறியதைப்போல இல்லாத ஒன்றை வெளியிட முடியாது என்பதால் மிகக் கவனமாகச் சதித்திட்டம் தீட்டி, அதை கசியவிடுவதைப்போல திருட்டுத்தனமாகக் கசியவிட்டு,  ஊடகங்களைப் பேசவைத்து,
ஊடகங்களுக்கு பெரும் பணம் கொடுத்து,
கேவலம் ஆட்சியைப் பிடிப்பதற்காக என்னென்ன தில்லுமுல்லுகள் களவாணித்தனமாகச்  செய்ய முடியுமோ அத்துனை களவாணித்தனங்களும் , அயோக்கியத்தனங்களும் புனையப்பட்டு
சர்வாதிகாரத்தனம் அத்துனையும் செய்து
சர்வாதிகாரர்களே ஆட்சியையும் பிடித்து
ஆட்சி செய்து வருகிறார்கள் என்றால் இது உலக மகா பொய்யர்களால் மட்டுமே முடியும். அவர்களாலே முடிந்தது. அவர்கள்தான் பாஜக என்கிற பாசிச கட்சி.
     பொய்யைக் கொண்டு,பொய்களை மூட்டை மூட்டையாகக் கொண்டு ஆட்சியலமர்ந்தவர்கள், உண்மையைப்  பேசி ஆட்சி செய்ய வரவில்லை. அவர்களுக்கு உண்மை பேசவும் தெரியாது என்பதே எதார்த்தம். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய்.
ஒரு உண்மையை மறைக்க பல பொய்கள் என ஆட்சி செய்துவருவதாலேயே கல்புர்கிகள் கொலை துவங்கி , அனிதா கொலை வரை நடந்து வருகிறது. இனியும் பாஜக நீடித்தால் இந்தியாவே தாங்க முடியாத, இழப்புகளை மட்டுமே சந்திக்கும் காலமாக மாறும் என்பதே உண்மை.
2 ஜி யால் இந்தியாவில் பலன்பெற்றது பாஜகவும்,பாபர் மசூதி இடிப்புக்கு ஆட்களை அனுப்பிய அதிமுகவும்தான்.
    ஒரு பக்கம் பாஜகவால் உலக அளவில் இந்தியா என்கிற கூட்டாட்சி நாடு அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மறுபுறம் அதிமுக என்கிற கட்சியால் தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத அசிங்கங்கள் அரங்கேற்றப்பட்டுக்கொண்டு அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
    இப்படியெல்லாம் எழுதுவது  திமுகவுக்கு நற்பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் அல்ல. இன்றைய தேவை தமிழுக்கு, தமிழகத்திற்கு அவசியத் தேவை திமுக மட்டுமே என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். இந்த சிங்கராயர் ஆரோக்கியசாமி எழுதி எதுவும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால்,
பல உண்மைகள் மறைக்கப்பட்டு,மிகப்பெரிய சதிவலைகள் பின்னப்பட்டு,சதி செய்து, பாஜகவும்,அதிமுகவும் ஆட்சியைப் பிடித்த வரலாறை இன்றைய இளைஞர்கள்  அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகிறது.
     புரிந்துகொள்ள வேண்டிய நேரத்தில் இளைஞர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் வரப்போகும் இழப்புகளைச் சந்திக்க நாம் உயிரோடு இருக்க வாய்புகள் மிக மிகக் குறைவே. வடலூரில் எரிக்கப்பட்டதுபோல நாமும் எரிக்கப்பட்டு விடுவோம்.
இளைஞர்களே கவனம் தேவை. 
குற்றவாளிகள் பாஜகவாகவோ ,அதிமுகவாகவோ இருக்கமாட்டார்கள். இந்த இருவரையும் ஆதரித்த கொடுஞ்செயலாளர்களாக மக்களே இருப்பார்கள்.
சிந்திப்பவன்தான் மனிதன்.
சிந்திக்க மறந்தவன் மனிதனாக இருக்க முடியாது.
   தமிழகம் அறிவற்ற மாநிலமாக
   தமிழர்கள் அறிவற்றவர்களாக ஆக்கப்படுவதற்குத் திமுகவே தடையாக இருக்கிறது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆர்.கே நகரில் தேர்தல் ஆணையம் அவர்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் திமுக கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் ஆணையத்தை மௌனியாக இருக்கச் சொல்லி,
தேர்தலில் பாஜகவும் கலந்து கொள்வதுபோல ஒரு நாடகத்தை நடத்தி திமுகவுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தி தனது மறைமுகத் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.
    இனியும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் நமக்கான பெயர் வேறு. புரிந்துகொள்ள முயலுங்கள்.
    வேலூர் சிங்கராயர்.

No comments:

Post a Comment